புதுடெல்லி மார்ச், 27
சிறையில் இருந்து உத்தரவு பிறப்பிக்க கெஜ்ரிவாலுக்கு தடை விதிக்க கோரி டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் கடந்த 21ம் தேதி அவர் கைது செய்யப்பட்டார். அவருக்கு எதிராக கர்ஜித் யாதவ் என்பவர் தாக்கல் செய்த பொதுநல மனுவில், சிறையில் இருந்து உத்தரவு பிறப்பிப்பது அரசியலமைப்புக்கு எதிரானது தடை விதிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.