சென்னை பிப், 19
சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் கடந்த ஆண்டு ஜூனில் கைது செய்யப்பட்ட செந்தில் பாலாஜியின் ஜாமீன் வழக்கில் இன்று இறுதி விசாரணை நடைபெறுகிறது. அமைச்சராக செயல்பட்டு வந்த அவர் சமீபத்தில் தனது அமைச்சர் பதவியும் ராஜினாமா செய்தார். தற்போது இதை காரணமாக வைத்து ஜாமீன் கோரியுள்ளார். இதில் அமலாக்க துறையின் வாதம் நிறைவடைந்து இன்று செந்தில் பாலாஜி தரப்பு வாதம் நடைபெற உள்ளது.