கன்னியாகுமரி ஆகஸ்ட், 24
குமரி மாவட்ட ஆட்சியர் அரவிந்த் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,
நாகர்கோவிலில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலக நாஞ்சில் கூட்ட அரங்கில் வருகிற 26 ம் தேதி காலை 11 மணிக்கு ஆட்சியர் தலைமையில் மீனவர் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற உள்ளது. எனவே மீன்வளம், மீனவர் நலத்துறை மற்றும் இதர அரசுத்துறைகளால் நிறைவேற்றப்பட வேண்டிய மீனவர்களின் குறைகள், கோரிக்கைகள், தேவைகள் அடங்கிய மனுக்களை 26ம் தேதி நடைபெறும் மீனவர் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் நேரில் வழங்கிட வேண்டும். கோரிக்கை மனுக்கள் கொடுக்கும் மீனவர்கள் மற்றும் மீனவப் பிரதிநிதிகள் இந்த கூட்டத்தில் கலந்து கொள்ள வேண்டுமென கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் என அதில் கூறப்பட்டுள்ளது.