மதுரை ஜன, 16
உழவர் திருநாளை முன்னிட்டு பாலமேட்டில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டியை அமைச்சர் மூர்த்தி கொடியசைத்து தொடங்கி வைத்தார். ஆயிரம் காளைகளும், 700 மாடுபிடி வீரர்களும் பங்கேற்க உள்ள நிலையில், அசம்பாவிதங்களை தடுக்க சிசிடிவி கேமராக்கள் உதவியுடன் 2500 காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர் முதல் பரிசாக காளை மற்றும் மாடுபிடி வீரருக்கு தலா ஒரு காரும், இரண்டாவது பரிசாக பைக் வழங்கப்படுகிறது.