நெல்லை ஆகஸ்ட், 22
நெல்லை மாநகரம் பாளையங்கோட்டை தூய சவேரியார் மேல்நிலைப் பள்ளியில், காலை இறைவணக்கம் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியின் போது ஒன்றுகூடியிருந்த பள்ளி மாணவர்களிடம் போதை பழக்கத்தால் ஏற்படும் விளைவுகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக நெல்லை மாநகர கிழக்கு காவல் துணை ஆணையாளர் ஸ்ரீனிவாசன் தலைமையேற்று பள்ளி மாணவர்களிடம் போதை பழக்கத்தால் ஏற்படும் விளைவுகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி உறுதிமொழி ஏற்க செய்தார்கள்.
இதில் பள்ளி நிர்வாகிகள் பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள் என சுமார் 3500 பேர் கலந்து கொண்டனர்.