புதுடெல்லி அக், 17
கூகுள் நிறுவனத்தின் சிஇஓ சுந்தர் பிச்சையுடன் பிரதமர் மோடி காணொளி காட்சி மூலம் கலந்துரையாடினார். UPI மூலம் இந்தியாவில் நிதிச் சேர்க்கை வலுப்படுத்துவதற்கான கூகுளின் திட்டங்கள் பற்றியும் மின்னணுவியல் உற்பத்தி சுற்றுச்சூழல் அமைப்பை விரிவுபடுத்தும் கூகுளின் திட்டம் குறித்தும், இருவரும் கலந்துரையாடினர். பின்னர் இந்தியாவில் Chromebook-களை தயாரிக்க HP உடனான கூகுளின் கூட்டுறவை பிரதமர் பாராட்டினார்.