நெல்லை ஆகஸ்ட், 19
நெல்லை மாவட்டம் திசையன்விளையை அடுத்து உள்ள குருகாபுரத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது 51). இவர் திசையன்விளை புறவழி சாலையில் பெட்டிக் கடை நடத்தி வந்தார்.நேற்று இரவு வழக்கம்போல் கடையை பூட்டிவிட்டு சென்றுவிட்டார். இன்று அதிகாலை 2 மணியளவில் கடை திடீர் என தீ பிடித்து எரிந்துள்ளது.
அக்கம்பக்கத்தினர் தகவலின்பேரில் திசையன்விளை தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று தீயை அணைத்தனர்.
ஆனால் கடைமுழுவதும் எரிந்து சாம்பல் ஆனது. தீ விபத்துக்கான காரணம் குறித்து திசையன்விளை காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். தீவிபத்து நடந்த கடையில் மின்சார வசதி கிடையாது. அதனால் முன்விரோதத்தில் யாராவது கடைக்கு தீ வைத்தார்களா? என்ற கோணத்திலும் விசாரணை நடந்து வருகிறது.