கோவா ஆக, 24
கல்வி முறையில் ஆக்கபூர்வமான சீர்திருத்தங்களை தேசிய கல்விக் கொள்கை கொண்டுவரும் என ஜனாதிபதி திரௌபதி முர்மு நம்பிக்கை தெரிவித்துள்ளார். கோவாவில் ராஜ்பவனில் நடந்த பட்டமளிப்பு விழா வில் பேசிய அவர் திறன் மேம்பாடு, வேலைவாய்ப்பு, ஆகியவற்றை மேம்படுத்த NEP 2020 கொள்கை உருவாக்கப்பட்டது. கல்வி மற்றும் ஆராய்ச்சியில் சிறந்த மையமாக இந்தியா மாறுவதற்கு அது நிச்சயம் கை கொடுக்கும் என்றார்.