Spread the love

நெல்லை ஆகஸ்ட், 19

நெல்லை டவுன் தெற்கு மவுண்ட் ரோடு தொட்டி பாலம் வாய்க்கால் பகுதியில் சமீபத்தில் புதிய பாலம் ஒன்று கட்டப்பட்டது. இந்தப் பாலத்தில் பெரிய அளவிலான பள்ளங்கள் ஏற்பட்டுள்ளது. தென்காசி மற்றும் கடையம் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் பஸ்களும், ஏராளமான சரக்கு வாகனங்களும் இந்த சாலை வழியாகத்தான் சென்றாக வேண்டும்.

தற்போது இந்த பாலம் சேதம் அடைந்து இருப்பதால் புதிதாக வரும் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் நிலை உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வாகன ஓட்டிகள் சிரமத்தை போக்கும் விதமாக பாலத்தை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நெல்லை மாவட்ட பொதுஜன பொதுநல சங்க தலைவர் முகமது அயூப் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *