சென்னை ஜூலை, 20
தமிழ்நாட்டின் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் இன்று அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று இபிஎஸ் அறிவித்துள்ளார். தக்காளி, சின்ன வெங்காயம், பருப்பு உள்ளிட்ட அத்யாவசிய பொருட்களின் விலை உயர்வை கண்டித்து இந்த ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. இதில் கட்சித் தொண்டர்கள் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என்று அதிமுக நிர்வாகிகளுக்கு இபிஎஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.