புதுடெல்லி ஜூலை, 15
சந்திராயன் 3 விண்கலம் நேற்று வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டு புவி வட்டப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டது இது இந்தியாவுக்கு பெருமைக்குரிய நிகழ்வு என்று பலரும் பாராட்டி வருகின்றனர். இஸ்ரோவின் நிலவை ஆராயும் முயற்சி உலக நாடுகள் இந்தியாவை ஆச்சரியத்துடன் பார்க்கின்றன. சந்திராயன் மூன்று விண்ணில் ஏவப்பட்ட புகைப்படங்களை இஸ்ரோ ட்விட்டரில் பகிர்ந்துள்ளது. திரளான மக்கள் நேரில் சென்று பார்த்துள்ளனர்.