திபெத் ஏப்ரல், 3
திபெத், ஜி ஜாங் நகரில் இன்று அதிகாலை 1:12 மணி அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது 4.2 ரிக்டர் அளவில் பதிவானதாக தேசிய நிலநடுக்கவியல் மையம் அறிவித்துள்ளது. நிலநடுக்கத்தால் பாதிப்புகள் ஏதேனும் ஏற்பட்டதாக தகவல்கள் ஏதும் வெளியாகவில்லை. இந்தியா மற்றும் இந்தியாவை சுற்றியுள்ள பகுதியில் தொடர்ந்து நிலநடுக்கம் ஏற்பட்டு வருகிறது. இந்த நிலநடுக்கம் பெரிய அளவில் ஏற்படாததால் பாதிப்புகள் ஏதுமில்லை.