சென்னை மார்ச், 31
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் சொத்தில் பங்கு வேண்டும் என்று மைசூரை சேர்ந்த வாசுதேவன் பெங்களூரு உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருக்கிறார். ஜெயலலிதாவுக்கு நேரடி வாரிசுகள் இல்லாததால் அண்ணன் வாரிசுகளான தீபா, தீபக்கிற்கு சொத்து வழங்கப்பட்டது. இந்நிலையில் 83 வயதாகும் வாசுதேவன், நான்தான் ஜெயலலிதாவின் சகோதரன் என்று மனு தாக்கல் செய்திருக்கிறார். இதனை நீதிமன்றம் விசாரணைக்கு எடுத்துக் கொண்டது.