புதுச்சேரி மார்ச், 27
புதுச்சேரியில் பாஜக பிரமுகர் செந்தில் குமாரை வெடிகுண்டு வீசி கொலை செய்துவிட்டு மர்ம நபர்கள் தப்பிய சம்பவம் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது. வில்லியனூரில் உள்ள தனது வீட்டுக்கு செல்லும் வழியில் செந்தில்குமாரை வெடுகுண்டு வீசி வழிமறித்த மர்ம நபர்கள் சரமாரியாக வெட்டி படுகொலை செய்துள்ளனர். இதில் சம்பவ இடத்திலேயே செந்தில்குமார் உயிரிழந்தார். இவர் அமைச்சர் நமச்சிவாயத்தின் தீவிர ஆதரவாளர் என கூறப்படுகிறது.