சென்னை மார்ச், 25
சுப்பிரமணியபுரம், ஈசன் போன்ற ஹிட் படத்தை கொடுத்த சசிகுமார் எப்போது தான் மீண்டும் படம் இயக்குவார் என்று ரசிகர்கள் காத்துக் கொண்டிருந்தனர். தொடர்ந்து படம் நடித்து வந்த அவர் இதில் கவனம் செலுத்த முடியாமல் இருந்தது. இந்நிலையில் தற்போது அவர் 13 ஆண்டுகளுக்கு பின் படம் இயக்க உள்ளார். அந்த படத்தில் இமைக்கா நொடிகள் வில்லன் அனுராக் காஷ்யப் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.