புதுடெல்லி மார்ச், 25
பாராளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்ட ராகுல் காந்தி டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமையகத்தில் இன்று மதியம் ஒரு மணிக்கு பத்திரிகையாளர்களை சந்திக்கிறார். நாடு முழுவதும் போராட்டம் நடத்த காங்கிரஸ் திட்டமிட்டுள்ள நிலையில் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து முக்கிய அறிவிப்பை அவர் வெளியிட உள்ளார். எந்த மாதிரியான அறிவிப்பை வெளியிடப் போகிறார் என ஒட்டுமொத்த நாடு எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறது.