பெங்களூரு மார்ச், 24
2022 ம் ஆண்டில் பெங்களூரில் ரூ.247 கோடி சைபர் குற்றவாளிகளால் மோசடி செய்யப்பட்டுள்ளதாக சிஐடி பகிர் தகவலை வெளியிட்டுள்ளது. இது குறித்து காவல் கண்காணிப்பாளர் சுமன் பென்னேகர் கூறுகையில், கிரிப்டோ கரன்சி வர்த்தகத்தில் சுமார் 70 கோடி ஏமாற்றப்பட்டுள்ளது. முந்தைய ஆண்டை விட 624 சதவீதம் அதிகமாகும். கிரிப்டோ வர்த்தகம் குறித்த விழிப்புணர்வு இல்லாததே மோசடிகளுக்கு நாளுக்கு நாள் பெருகுவதற்கு காரணம் என்றார்.