வேலூர் மார்ச், 14
வேலூர் கிரீன் சர்க்கிளில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் பா.ஜ.க. சார்பில் மாநில செயற்குழு கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு நெசவாளர் பிரிவு மாநில தலைவர் பாலமுருகன் தலைமை தாங்கினார். மாநில துணைத்தலைவர்கள் உமாபதி, நாகுசா, பன்னீர்செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சிறப்பு அழைப்பாளராக மாநில துணைத்தலைவர் துரைசாமி கலந்து கொண்டு பேசினார். மாநில பொதுச் செயலாளர் கார்த்தியாயினி, மாநில துணைத்தலைவர் மற்றும் மாவட்ட பார்வையாளர் கே.எஸ். நரேந்திரன், மாவட்ட தலைவர் மனோகரன், நெசவாளர் பிரிவு மாவட்ட தலைவர் சுகன்யா உள்பட கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.