Spread the love

திருவாரூர் பிப், 2

முத்துப்பேட்டை கால்நடை மருந்தக வளாகத்தில் மண்டல இணை இயக்குனர் ராமலிங்கம் அறிவுரையின் பேரில் தமிழ்நாடு அரசு கால்நடை பராமரிப்பு துறை சார்பில் தேசிய வேளாண் அபிவிருத்தி ராஷ்டிரிய கிருஷி விகாஸ் யோஜனா 2022 -23-ம் ஆண்டு திட்டம் சார்பில் வெறிநோய் தடுப்பு மற்றும் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு வட்டார கால்நடை மருத்துவர் மகேந்திரன் தலைமை தாங்கினார். முன்னாள் பேரூராட்சி மன்ற தலைவர் கார்த்திக் முன்னிலை வகித்தார். முகாமை டெல்லி சிறப்பு பிரதிநிதி விஜயன் தொடங்கி வைத்தார். இதில் கால்நடை மருத்துவர்கள் மகேந்திரன், ராஜசேகர், ராஜேஷ் குமார், கால்நடை ஆய்வாளர்கள் முருகேஷ், சாந்தி, நிர்மலா, கால்நடை உதவியாளர்கள் வீரமணி, சண்முகம், பிரசன்னா, மாதவன், மகாலட்சுமி, செல்வராஜ் ஆகியோர் கொண்ட மருத்துவ குழுவினர் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து, முத்துப்பேட்டை மற்றும் அதன் சுற்று வட்டார கிராமங்களிருந்து பொதுமக்கள் தங்கள் செல்ல பிராணிகளுக்கு இலவசமாக தடுப்பூசி போட்டுக்கொண்டனர். இதில் பேரூராட்சி கவுன்சிலர் லட்சுமி செல்வம், அப்பகுதி பிரதிநிதிகள் செல்வம், பாலசுப்பிரமணியன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *