திருவாரூர் ஜன, 31
தமிழகத்தில் அணிவகுப்பிற்கு அனுமதி கேட்டு ஆர்எஸ்எஸ் தொடர்ந்த வழக்கின் விசாரணையை சென்னை உயர்நீதிமன்றம் பிப்ரவரி 3ம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளது. ஈரோடு மற்றும் திருவாரூரில் ஜனவரி 29ம் தேதி அணிவகுப்பு மற்றும் பொதுக்கூட்டம் நடத்த அனுமதி கேட்டு ஆர்எஸ்எஸ் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தது. இதை நேற்று விசாரித்த நீதிபதிகள் வழக்கின் விசாரணையை ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.