திண்டுக்கல் ஜன, 29
பழனி முருகன் கோவிலில் தைப்பூச திருவிழா இன்று கொடியேற்றத்துடன் துவங்குகிறது. 10 நாட்கள் நடைபெறும் இந்த திருவிழாவில் முதல் நாளில் பெரிய நாயகி அம்மன் கோவிலில் விநாயகர் பூஜை முத்துக்குமார் சுவாமி வள்ளி தெய்வானைக்கு அபிஷேகம் நடைபெற உள்ளது. விழாவைக் காண பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பாதயாத்திரையாகவும், காவடி எடுத்தும் பழனிக்கு வருவார்கள். பிப்ரவரி 7 நிகழ்ச்சியுடன் விழா நிறைவு பெறுகிறது.