திண்டுக்கல் ஜன, 27
குடியரசு தினத்தை முன்னிட்டு திண்டுக்கல்லில் கிராம சபை கூட்டத்தில் அமைச்சர் அர.சக்கரபாணி பங்கேற்றார். கூட்டத்தில் பேசிய அவர் திமுக அரசு நடைமுறைப்படுத்திய பல்வேறு திட்டங்கள் குறித்தும், செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்தும் எடுத்துரைத்தார். அப்போது குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உரிமை தொகை வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் ஸ்டாலின் விரைவில் செயல்படுத்த உள்ளதாக கூறினார்.