திண்டுக்கல் ஜன, 27
பழனி தண்டாயுதபாணி சுவாமி மலை கோவிலில் 16 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று குடமுழுக்கு விழா நடைபெற உள்ளது. கடந்த 23ம் தேதி காலை வேள்வியாக சாலை பூஜைகள் தொடங்கின. உற்சாகமாக நடந்து வரும் இந்த திருவிழாவில் இன்று குடமுழுக்கு செய்ய இருப்பதால், திண்டுக்கல் மாவட்டத்திற்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும் திருவிழாவில் 2000 காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.