Spread the love

திருவள்ளூர் ஜன, 10

மஞ்சப்பை வழங்கும் எந்திரம் ஆட்சியர் அலுவலகத்திலும், திருவள்ளூரில் உள்ள மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரிய அலுவலகத்திலும் வைக்கப்பட்டு பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது.

இந்த நிலையில் திருவள்ளூர் பேருந்து நிலையத்தில் மஞ்சப்பை விற்பனை எந்திரத்தை மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் தொடங்கி வைத்தார். இதில் ரூ.10 செலுத்தி மஞ்சப்பையை பெற்றுக்கொள்ளலாம். இதில் புதிய ரூ.1, ரூ.2, ரூ.5, ரூ.10 மற்றும் 10 ரூபாய் நோட்டுகளை செலுத்த வசதி செய்யப்பட்டு உள்ளது.

இந்நிகழ்ச்சியில் நகராட்சி ஆணையர் க.ராஜலட்சுமி, சுகாதார அலுவலர் கே.ஆர்.கோவிந்தரா ஜூலு, சுகாதார ஆய்வாளர் வெயில்முத்து உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *