திண்டுக்கல் ஆகஸ்ட், 10
உடுமலைப்பேட்டையில் 20-வது தேசிய ஓபன் சாம்பியன்ஷிப் கராத்தே போட்டிகள் நடந்தது. இப்போட்டியில் ஆந்திரா, கேரளா, உபி, கர்நாடகா உள்பட பல்வேறு மாநிலங்களில் இருந்து சுமார் 500 க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
மேலும் திண்டுக்கல்லில் இருந்து 28 வீரர்-வீராங்கனைகள் பங்கேற்று விளையாடினர். கட்டா என்னும் தனிப்பிரிவில் 2 பேர் முதலிடம் பிடித்தனர். 4 வீரர்கள் 2-வது இடம் பிடித்தனர். 19 பேர் 3-வது இடம் பிடித்து அசத்தினர். குமிதே பிரிவில் ஒருவர் 2-வது இடம் பிடித்தார். வெற்றிபெற்றவர்களுக்கு பரிசுகோப்பை மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது.
இதனையடுத்து திண்டுக்கல் திரும்பிய வீரர்களுக்கு பாராட்டு விழா நடந்தது. இதில் திருச்சி பொருளாதார குற்றப்பிரிவு ஆய்வாளர் ஜான் கென்னடி பங்கேற்று வீரர்களை பாராட்டி பரிசு வழங்கினார். மேலும் கராத்தே பயிற்சியாளர் ராஜகோபால், கோபிநாத் உள்பட பலர் கலந்து கொண்டனர்.