Spread the love

தர்மபுரி டிச, 19

அரூர் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் சார்பு நீதிமன்றம், மாவட்ட உரிமையியல் நீதிமன்றம், மற்றும் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் ஆகிய நீதிமன்றங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த நீதிமன்றங்களில் சார்பு நீதிமன்றம், உரிமையியல் நீதிமன்றம், குற்றவியல் நீதிமன்றங்களில் தருமபுரி மாவட்ட பொறுப்பு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் சுவாமிநாதன், நிர்மல் குமார் ஆகியோர் நேரில் ஆய்வு செய்தார்கள்.

ஆய்வின் போது நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகள் குறித்தும், அந்தந்த வழக்குகளின் விசாரணை குறித்தும் நீதிபதி கேட்டறிந்தார். மேலும் நீதிமன்றங்களில் நடைபெற்று வரும் வழக்கு விசாரணைகள் குறித்தும் கேட்டறிந்தார். ஆய்விற்குப் பிறகு அரூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் இடமாற்றம் குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது அதன் பிறகு அரூர் கிளை சிறைச்சாலையில் நீதிபதிகள் ஆய்வு மேற்கொண்டனர் ஆய்வின் போது அரூர் சார்பு நீதிமன்ற நீதிபதி முகமது அன்சாரி, உரிமையில் நீதிமன்ற பொறுப்பு நீதிபதி ராஜேஷ்குமார் ஆகியோர் உடனிருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *