திண்டுக்கல் டிச, 18
திண்டுக்கல் மாவட்டத்தில் பழனி முருகன் கோவிலுக்கு அமைச்சர் பி.டி. ஆர் பழனிவேல் தியாகராஜன் சென்றிருந்தார். அங்கு அவர் ரோப் காரில் கோவிலுக்கு சென்ற போது திடீரென ஏற்பட்ட மின்தடை காரணமாக சிலர் நிமிடங்கள் அவர் அந்தரத்தில் சிக்கினார். இதனால் அங்கு பெரும் பதற்றம் ஏற்பட்டது தொடர்ந்து சில நிமிடங்களில் மின்தடை சீரானதால் அமைச்சர் பிடி.ஆர் ரோப் காரில் இருந்து பத்திரமாக மீட்கப்பட்டார்.