திண்டுக்கல் டிச, 22
கொடைக்கானலில் பல்வேறு நகராட்சி வளர்ச்சித்திட்டங்களை செயல்படுத்துவதற்கு நிதி ஒதுக்கீடு செய்ய தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலினிடம் நகராட்சிகள் நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, சட்ட மன்ற உறுப்பினர் பழனி செந்தில்குமார் ஆகியோர் விடுத்த கோரிக்கையை ஏற்று ரூ.70 கோடி நிதி ஒதுக்கீடு செய்ய ஆணை பிறப்பிக்கப்பட்டு தற்போது ரூ.39 கோடி மதிப்பில் நகராட்சி வளர்ச்சி திட்டப்பணிகள் நடைபெற்று வருகிறது.
இந்த பணிகளை நகராட்சிகள் நிர்வாகத்துறை இயக்குநர் பொன்னையா அறிவுறுத்தலின்படி நகராட்சிகள் நிர்வாக மண்டல இயக்குனர் சரவணன், மண்டல தலைமை செயற்பொறியாளர் மனோகரன் ஆகியோர் ஆய்வு செய்தனர்.
இந்த ஆய்வின்போது கொடைக்கானல் நகராட்சி ஆணையாளர் நாராயணன், நகராட்சி பொறியாளர் முத்துக்குமார், உதவிப்பொறியாளர் செல்லத்துரை மற்றும் ஊழியர்கள் உடனிருந்தனர்.