Spread the love

நெல்லை ஆகஸ்ட், 9

நெல்லை மேலப்பாளையத்தில் டக்கரம்மாள்புரம் சாலையில் மாநகராட்சி கால்நடை சந்தை அமைந்துள்ளது. இந்த சந்தையில் வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை வியாபாரிகள், பொதுமக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும்.

நெல்லை மட்டுமல்லாது அண்டை மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான வியாபாரிகள் ஆடு, கோழி, கருவாடு உள்ளிட்டவற்றை விற்பனைக்காக கொண்டு வருவது வழக்கம். முக்கிய விழா காலங்களில் ஆடுகள் விலை எதிர்பாராததை விட அதிகமாக இருக்கும்.

தற்போது ஆடி மாதம் என்பதால் ஏராளமான கிராமங்களில் கோவில் கொடைகள் நடைபெற்று வருகிறது. இதில் பக்தர்கள் தங்களது நேர்த்தி கடன்களை நிறைவேற்றுவதற்காக ஆடுகளை அதிக அளவில் வாங்கி செல்கின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *