Spread the love

கொடைக்கானல் டிச, 14

கொடைக்கானலுக்கு பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலா பயணிகள் வருகின்றனர். இவர்களை நம்பி வியாபாரிகள், கைடுகள், தங்கும்விடுதி உரிமையாளர்கள் உள்ளனர். இந்த நிலையில் அனும‌தியின்றி டென்ட் கூடாரங்கள் உள்ளிட்டவைகள் அமைப்ப‌த‌ற்கும் மாவட்ட நிர்வாகம் தடை விதித்திருந்த‌து. ஆனால் சிலர் மலைகிராமங்களில் ஆபத்தான முறையில் டென்ட் அமைத்து சுற்றுலா பயணிகளுக்கு வாடகைக்கு விட்டனர். இதனால் பல்வேறு பிரச்சினைகள் எழுந்தது. இதனையடுத்து சுற்றுலாத்துறை சார்பில் ஹோம் ஸ்டே,சாகச சுற்றுலா பயணம்,கேம்பிங் சைட்ஸ் உள்ளிட்டவைகளுக்கு வழிகாட்டு நெறிமுறைகள் குறித்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

இதில் டென்ட் கூடாரங்கள் உள்ளிட்ட கேம்பிங் ஆப்ப‌ரேட்டர் உரிமம் பெறுபவர்கள் அரை ஏக்கர் நிலம் வைத்திருக்க வேண்டும். பிரிமியம் உரிமம் பெறுபவர்கள் குறைந்தபட்சமாக 2 ஏக்கர் நிலம் வைத்திருக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டது.

இதில் கோட்டாட்சிய‌ர் ராஜா, வ‌ட்டாட்சிய‌ர் முத்துராம‌ன், சுற்றுலா உத‌வி அலுவ‌ல‌ர் சுதா உள்ளிட்ட அரசு அதிகாரிகளும், டென்ட் கூடாரம் மற்றும் ஹோம் ஸ்டே அமைக்கும் 50-க்கும் மேற்பட்ட நபர்களும் க‌லந்துகொண்ட‌ன‌ர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *