வேலூர் டிச, 13
குடியாத்தம் அருகே 10-ம் நூற்றாண்டை சேர்ந்த நடுகல் கண்டெடுக்கப்பட்டுள்ளது. நடுகற்கள் குடியாத்தம் அருகே உள்ள செண்டாத்தூர் என்ற கிராமத்தில் கால்வாய் ஓரம் நடுகற்கள் இருப்பதாக வரலாற்ற ஆர்வலர்கள் சரவணராஜா, நரசிம்மன் ஆகியோருக்கு தெரியவந்தது. அதைத்தொடர்ந்து அவர்கள் அந்த கிராமத்துக்கு சென்று நடுகற்களை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அந்த கற்கள் 10-ம் நூற்றாண்டை சேர்ந்தது என்பது தெரியவந்தது.