திருச்சி டிச, 13
தமிழகத்தில் தொடர்ந்து ஆர்.எஸ்.எஸ். அமைப்பு மத தலைவர்களை அவமதிக்கும் செயலில் ஈடுபட்டு வருவதாக பல்வேறு புகார்கள் எழுந்தனர். அந்த வகையில், திருவள்ளுவர், பெரியார் ஆகியோரை தொடர்ந்து டாக்டர் அம்பேத்காருக்கு காவி, திருநீறு, குங்குமமிட்டு அவமதிக்கும் சனாதன சங்பரிவார் அமைப்பை கண்டித்து தமிழக முழுவதும் விடுதலை சிறுத்தை கட்சிகள் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அதன் ஒரு பகுதியாக திருச்சி மாவட்டச் செயலாளர் அருள் தலைமையில் கலெக்டர் அலுவலகம் முன்பு சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட விடுதலை சிறுத்தை கட்சிகளை சேர்ந்த தொண்டர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.