திருச்சி டிச, 10
திருச்சியில் இருந்து குஜராத் மாநிலம் ஆமதாபாத் இடையே வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது. இதற்கான உத்தரவை ரெயில்வே அறிவித்துள்ளது. அதன்படி ஆமதாபாத்தில் இருந்து வாராந்திர சிறப்பு ரயில் இயங்கவுள்ளது. இந்த ரயில் வருகிற 22 ம் தேதி காலை 9.30 மணிக்கு புறப்பட்டு 24 ம்தேதி அதிகாலை 3.45 மணிக்கு திருச்சிக்கு வந்தடையும்.
மேலும் மறுமார்க்கமாக திருச்சியில் இருந்து ஆமதாபாத்துக்கு வருகிற 25ம்தேதி காலை 5.45 மணிக்குப் புறப்பட்டு அடுத்த நாள் 26ம் தேதி இரவு 9.15 மணிக்கு ஆமதாபாத்தை சென்றடையும். இந்த ரயில்கள் வருகிற 22 ம் தேதி முதல் அடுத்த மாதம் 30 ம்தேதி வரை மட்டுமே இயங்கும். இந்த ரயில் திருச்சியில் இருந்து தஞ்சை, பாபநாசம், கும்பகோணம், மயிலாடுதுறை, வைத்தீஸ்வரன் கோவில், சீர்காழி, சிதம்பரம், செங்கல்பட்டு, தாம்பரம், சென்னை எழும்பூர், பெரம்பூர், அரக்கோணம், ரேணிகுண்டா, கடப்பா, மந்திராலயம், புனே, சூரத், வதோதரா வழியாக ஆமதாபாத்தை சென்றடையும் என்பது குறிப்பிடத்தக்கது.