திருச்சி டிச, 7
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் முதலமைச்சரின் முகவரித்துறைக்கான ஆய்வுக்கூட்டம் கடந்த 2 ம்தேதி தலைமை செயலகத்தில் நடந்தது. இந்த கூட்டத்தில் திருச்சி மாவட்டம் முசிறி காவல் துணை கண்காணிப்பாளர் யாஸ்மினை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு முதல்வரின் முகவரித்துறையின் கீழ் பெறப்பட்ட 1,400 மனுக்களில் 97 சதவீதம் மனுக்களுக்கு சிறப்பாக தீர்வு கண்டதற்காக தனது பாராட்டுக்களை தெரிவித்தார்.
இந்தநிலையில் திருச்சியில் நேற்று நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் காவல் துணை கண்காணிப்பாளர் யாஸ்மின் பணியை பாராட்டி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் பாராட்டு சான்றிதழை வழங்கி வாழ்த்துக்களை தெரிவித்தார்.