Spread the love

விருதுநகர் டிச, 11

அருப்புக்கோட்டை அருகே அம்பலதேவநத்தம் வருவாய் கிராமத்தில் ஆயிரக்கணக்கான ஏக்கர் அளவில் விவசாயம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இப்பகுதியில் சோலார் மின் நிலையம் அமைக்க அனுமதி அளித்ததாக கூறப்படுகிறது. எந்தவித கருத்தும் கேட்காமல் அனுமதி அளித்ததாக கூறி மாவட்ட நிர்வாகத்தையும், மின்வாரியத்தையும் கண்டித்து அருப்புக்கோட்டை பாவடி தோப்பு பகுதியில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள் மாவட்ட நிர்வாகத்தையும், மின்வாரியத்தையும் கண்டித்து முழக்கங்கள் எழுப்பினர். இதில் பா.ஜ.க. நகர, ஒன்றிய, மாவட்ட அணி நிர்வாகிகள், விவசாயிகள் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *