கன்னியாகுமரி டிச, 11
நாகர்கோவில் கோட்டார் ரயில் நிலையத்தின் மறுபுறம் அமைந்துள்ள ஊட்டுவாழ்மடம் மற்றும் கருப்புக் கோட்டை ஊர்களில் ஆயிரக்கணக்கான மக்கள் வசித்து வருகின்றனர். அவர்கள் நகர பகுதிக்கு வருவதற்கு ரயில் தண்டவாளத்தைக் கடக்க வேண்டிய சூழ்நிலை உள்ளது. ரயில்வே கேட் அடிக்கடி மூடப்படுவதால் மக்கள் பயணம் செய்ய மிக சிரமப்படுகின்றனர்.
இதனால் ஊர்மக்கள் பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்தைச் சந்தித்து ரயில்வே மேம்பாலம் அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். இந்நிலையில், ஊர் மக்களின் கோரிக்கையை ஏற்று கன்னியாகுமரி விஜய் வசந்த், இன்று அந்த ஊர்களில் சென்று ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வின்போது மாநகர மாவட்ட தலைவர் நவீன் குமார், மண்டல தலைவர் கண்ணன், ரெயில்வே ஆலோசனை குழு உறுப்பினர் சூசை ராஜ் ஆகியோர் உடனிருந்தனர்.