Spread the love

திண்டுக்கல் டிச, 11

முருகனின் 3-ம் படை வீடான பழனிக்கு தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் வருகின்றனர். தற்போது சபரிமலை சீசன் நடைபெற்று வருவதால் அய்யப்பன் கோவிலுக்கு மாலை அணிந்து செல்லும் பக்தர்கள் தங்கள் புனித யாத்திரையில் பழனி முருகனையும் தரிசனம் செய்து செல்கின்றனர். இதனால் கடந்த சில நாட்களாக அய்யப்ப பக்தர்கள் வருகை அதிகரித்து காணப்படுகிறது.

மேலும் இன்று விடுமுறை என்பதால் சுற்றுவட்டாரத்தில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்திருந்தனர். இதனால் அடிவாரம் மலைக்கோவில், கிரி வீதி, பஸ் நிலையம் உள்ளிட்ட முக்கிய இடங்களில் மக்கள் கூட்டம் அலைமோதியது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *