திண்டுக்கல் டிச, 9
மாண்டஸ் புயல் காரணமாக சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் கன மழை பெய்து வருகிறது. இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் சுற்றுலா தளங்களுக்கு சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. பைன்மரக்காடுகள், மோயர் சதுக்கம் உள்ளிட்ட இடங்களுக்கு யாரும் செல்ல வேண்டாம் என மாவட்ட வனத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.