தேனி டிச, 9
தேனி அருகே கஞ்சா கடத்தி வந்து விற்பனைக்காக பொட்டலம் போட்டுக் கொண்டு இருந்த 5 வாலிபர்களை காவல் துறையினர் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 12 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். தேனி அல்லிநகரம் பாண்டியன் நகரில் உள்ள முட்புதருக்குள் சிலர் கஞ்சாவை விற்பனை செய்வதற்காக பொட்டலம் போட்டுக் கொண்டு இருப்பதாக காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.