Spread the love

ஈரோடு டிச, 8

பெருந்துறை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் ஒப்பந்த அடிப்படையில் சுமார் 200-க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் வேலை செய்து வருகின்றனர். இவர்களை தனியார் நிறுவனம் ஒன்று தினக்கூலி அடிப்படையில் இவர்களை பணியில் அமர்த்தி உள்ளது.

கடந்த 3 ஆண்டுகளாக இவர்களுக்கு சராசரி தினக்கூலியாக ரூ.490 என்ற அடிப்படையில் கூலிக்கு அமர்த்தியுள்ளனர். ஆனால் தற்போது வரை ரூ.360 மட்டுமே வழங்கி வருவதாக கூறப்படுகிறது. மேலும் இவர்களுக்கு வருடம் ஒருமுறை வழங்கக்கூடிய ஊதிய உயர்வு, போனஸ் மற்றும் தூய்மை பணியாளர்னளுக்கான உபகரணங்கள் எதுவும் வழங்கப்பட வில்லை.

இதனை கண்டித்து நேற்று மாலை முதல் ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் வேலையை புறக்கணித்து கல்லூரி மருத்துவமனைக்குள் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பி போராடி வருகின்றனர். இந்நிலையில் இன்று 2-வது நாளாக ஒப்பந்த பணியாளர்கள் மருத்துவ கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *