ஈரோடு டிச, 6
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகள் மற்றும் பல்வேறு இடங்களில் பூக்கள் சாகுபடி செய்யப்படுகிறது. இந்த பூக்கள் சத்தியமங்கலம் பூ மார்க்கெட் மற்றும் ஈரோடு பூ மார்க்கெட்டுகளுக்கு விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது.
இதே போல் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இரூந்தும் ஈரோடு பூ மார்க்கெட்டுக்கு விற்பனைக்கு பூக்கள் கொண்டு வரப்படுகிறது. தற்போது கடும் பனி நிலவிவரூவதால் சத்தியமங்கலம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் பயிரிட்டுள்ள மல்லிகை செடிகளில் பூக்கள் குறைந்த அளவிலேயே வரூகிறது. மேலும் தற்போது கார்த்திகை மாதம் சுபமுகூர்த்த நாள், கார்த்திகை தீபம் மற்றும் அய்யப்ப பக்தர்கள் விரதம் இரூந்து கோவிலுக்கு செல்வதால் பூக்களின் தேவை அதிகரித்துள்ளது. பூக்களின் தேவை அதிகரித்து, வரத்து குறைந்து உள்ளதால் ஈரோடு பூ மார்க்கெட்டில் பூக்களின் விலை கிடுகிடு வென உயர்ந்து வரூகிறது.