விருதுநகர் டிச, 1
அருப்புக்கோட்டை-பந்தல்குடி சாலையில் அமைந்துள்ள கிளை சிறையில் மாவட்ட குற்றவியல் முதன்மை நீதிபதி கஜாரா திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
மேலும் இந்த ஆய்வின்போது கைதிகள் அறை, சமையலறை, கழிவறைகள், அலுவலக கோப்புகளை ஆய்வு செய்தார். அதனைத்தொடர்ந்து டவுன் காவல் நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின்போது உதவி காவல் கண்காணிப்பாளர் கருண்காரட், ஆய்வாளர், துணை ஆய்வாளர்கள், காவல் துறையினர் ஆகியோர் உடனிருந்தனர்.