திருவாரூர் நவ, 29
முத்துப்பேட்டையில் கடலோர செயல்பாட்டு கூட்டமைப்பு மற்றும் தமிழக மீனவ பெண் தொழிலாளர்கள் சங்கம் சார்பில் உலக மீனவர் தினத்தை முன்னிட்டு மீனவர்களின் வாழ்வும், வாழ்வுரிமையும், மனித உரிமையும் என்ற தலைப்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது.
இதில் நிர்வாகிகள் மீனவர்களின் வாழ்வாதாரம் குறித்தும், வாழ்வுரிமை குறித்தும், அவர்களின் உரிமைகள் குறித்தும் பேசினர். இதில், முத்துப்பேட்டை சுற்றுவட்டார பகுதியில் உள்ள மீனவர்கள் குடும்பத்தினர் பலர் கலந்து கொண்டனர்.