சேலம் நவ, 28
சேலம் மாவட்ட பொதுமக்கள் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்கள் பயன்பெறும் வகையில் மாவட்ட நிர்வாகம் மற்றும் தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கம் சார்பில் சேலம் புதிய பேருந்து நிலையம் அருகே புத்தகத் திருவிழாவினை அமைச்சர் கே.என். நேரு கடந்த 20 ம்தேதி தொடங்கி வைத்தார்.
இந்த புத்தகத் திருவிழா வருகிற 30 ம்தேதி வரை தொடர்ந்து 11 நாட்களுக்கு நடைபெறுகின்றது. சேலம் புத்தகத் திருவிழா வினை இதுவரை சுமார் 2 லட்சத்திற்கும் மேற்பட்ட புத்தக ஆர்வலர்கள், மாணவ, மாணவியர்கள் மற்றும் பொதுமக்கள் கண்டுகளித்தனர். இதுவரை ரூ.1.50 கோடி மதிப்பிலான புத்தகங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.
குறிப்பாக, சேலம் மாவட் டத்தைச் சேர்ந்த உள்ளூர் படைப்பாளர்களின் 456 புத்தகங்கள் ரூ.63,578 க்கு விற்பனை செய்யப் பட்டுள்ளன. இங்கு தினமும் பள்ளி மாணவ, மாணவியர்களுக்கான பல்வேறு போட்டிகள் மற்றும் பொதுமக்களைக் கவரும் வகையிலான கண்கவர் கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்று வருகிறது.