Spread the love

சேலம் நவ, 24

தமிழ்நாடு கால்நடை பராமரிப்பு துறை சார்பில் ஏற்காடு செம்மநத்தம் கால்நடை மருந்தகம் எல்லைக்கு உட்பட்ட மலை கிராமங்களில் சிறப்பு கால்நடை சுகாதாரம் மற்றும் விழிப்புணர்வு முகாம் நடத்தப்பட்டது.

இம்முகாமில் கால்நடைகளுக்கு சிகிச்சை அளித்தல், செயற்கை கருவூட்டல், சினை பரிசோதனை, குடற்புழு நீக்கம், கால்நடைகளுக்கு மலடு நீக்க சிகிச்சை, கோழிகளுக்கு தடுப்பூசி போடுதல் உள்ளிட்ட சிகிச்சைகள் அளிக்கப்பட்டது. கிராம மக்கள் தங்கள் கால்நடைகளுடன் இந்த முகாமில் கலந்து கொண்டனர்.

மேலும் சிறந்த முறையில் வளர்க்கப்பட்ட கிடாரிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. கால்நடைகள் பராமரிப்பு குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சியும் நடத்தப்பட்டது. இம்முகாமில் கால்நடை மருத்துவர் பாண்டியன், கால்நடை ஆய்வாளர்கள் மற்றும் ஊழியர்கள் கலந்து கொண்டனர். இதில் பல விவசாயிகள் கலந்து கொண்டு பலன் பெற்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *