செங்கல்பட்டு நவ, 24
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் ராகுல் நாத் தலைமையில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் சாலை வசதி, குடிநீர் வசதி, மின்சார வசதி, போக்குவரத்து வசதி, பட்டா மாற்றம், முதியோர் உதவித்தொகை போன்ற பல்வேறு வகைப்பட்ட 248 மனுக்கள் பெறப்பட்டது.
இந்த மனுக்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு துறை சார்ந்த அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார். மேலும் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் 9 பயனாளிகளுக்கு தலா ரூ.1 லட்சத்து 5 ஆயிரம் வீதம் ரூ.9 லட்சத்து 45 ஆயிரம் மதிப்பீட்டிலான மின்கலனால் இயங்கும் சிறப்பு சக்கர நாற்காலிகளை வழங்கினார்.
இந்தக் கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் மேனுவல் ராஜ், தனி துணை ஆட்சியர் லட்சுமணன், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் லலிதா, மாவட்ட மாற்றுதிறனாளிகள் நல அலுவலர் செந்தில்குமாரி, மாவட்ட ஆதிதிராவிடர் அலுவலர் சுந்தரம் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் பங்கேற்றனர்.