செங்கல்பட்டு நவ, 22
செங்கல்பட்டு வருவாய் மாவட்டம் மற்றும் காஞ்சிபுரம் வருவாய் மாவட்டம் இணைந்து திருப்போரூர் மற்றும் பல்லாவரம் ஆகிய பகுதிகளில் புதிய நீதிமன்றங்கள் திறப்பு விழா செங்கல்பட்டில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடந்தது. இதில் சென்னை உயர் நீதிமன்றம் பொறுப்பு நீதிபதி ராஜா புதிதாக செங்கல்பட்டு வருவாய் மாவட்டத்தில் திருப்போரூர் மற்றும் பல்லாவரம் ஆகிய 2 இடங்களில் புதிய கோர்ட்டுகளை திறந்து வைத்தார்.இந்நிகழ்ச்சியில் அமைச்சர் ரகுபதி, மாவட்ட நீதிபதி மேவிஸ் தீபிகா சுந்தரவதனா, மாவட்ட ஆட்சியர் ராகுல்நாத், காவல் கண்காணிப்பாளர் பிரதீப் பங்கேற்றனர்.