Spread the love

விருதுநகர் நவ, 6

கர்நாடகா டிரேடர்ஸ் சேம்பர் ஆப் காமர்ஸ் மற்றும் ஆசியஅரபு டிரேடர்ஸ் சேம்பர் ஆப் காமர்ஸ் இணைந்து கல்வித்துறையில் கிராமப்புற மாணவர்களுக்கு தரமான கல்வி, பயிற்சி மற்றும் வேலைவாய்ப்பு போன்ற தகுதிகளின் அடிபபடையில் சிறந்த கல்லூரிகளுக்கு விருது வழங்கும் விழாவை பெங்களூருவில் நடத்தியது.இதில் 50க்கும் மேற்பட்ட கல்லூரிகள் மற்றும் பயிற்சி மையங்களை சேர்ந்தவர்கள் பங்கேற்றனர்.

இதில் சிவகாசி பி.எஸ்.ஆர். பொறியயில் கல்லூரிக்கு கிராமப்புற மாணவர்களுக்கு தரமான கல்வி மற்றும் வேலைவாய்ப்புகள் வழங்கியதற்காக விருது வழங்கப்பட்டது.பி.எஸ்.ஆர். பொறியயில் கல்லூரியின் பயிற்சி மற்றும் வேலைவாய்ப்பு துறையானது முனைப்புடன் செயல்பட்டு ஒவ்வொரு ஆண்டும் வேலைவாய்ப்பு விகிதத்தை அதிகரித்து வருகிறது. கடந்த கல்வி ஆண்டில் பல்வேறு துறை சார்ந்த மற்றும் மென்பொருள் சார்ந்த பன்னாட்டு நிறுவனங்களில் 1263 பணி நியமன ஆணைகளை பெற்று தந்துள்ளது.சிறந்த முறையில் செயலாற்றிய பயிற்சி மற்றும் வேலைவாய்ப்பு துறையின் ஒருங்கிணைப்பாளர்களை கல்லூரியின் தாளாளர் சோலைசாமி, இயக்குநர் விக்னேஸ்வரி அருண்குமார், முதல்வர் மாரிச்சாமி ஆகியோர் பாராட்டினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *