Spread the love

கன்னியாகுமரி அக், 21

தக்கலையில் உள்ள கல்குளம் வட்ட வழங்கல் அலுவலர் சுனில்குமார் மற்றும் அதிகாரிகள் நேற்று காலையில் சுங்கான்கடை பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த சொகுசு காரை நிறுத்துமாறு சைகை காட்டினர். ஆனால் கார் நிற்காமல் சென்றது. உடனே அதை அதிகாரிகள் வாகனத்தில் துரத்தி சென்றனர். சிறிது தூரம் சென்றதும் காரை நிறுத்தி விட்டு ஓட்டுனர் இறங்கி தப்பி ஓடினார்.

தொடர்ந்து காரை சோதனையிட்ட போது அதில் ரேஷன் அரிசி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. விசாரணையில் இந்த அரிசி கேரளாவுக்கு கடத்த முயன்றது தெரிய வந்தது. இதையடுத்து காரையும், அரிசியையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

இதனைத் தொடர்ந்து அழகியமண்டபம் பகுதியில் ஆட்டோவில் கேரளாவுக்கு கடத்த முயன்ற 500 கிலோ ரேஷன் அரிசியை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அத்துடன் ஆட்டோவும் பறிமுதல் செய்யப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *