Spread the love

விருதுநகர் செப், 30

சாத்தூர் அருகே இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நடந்தது. 11 உண்டியல்கள், ஒரு கால்நடை மற்றும் அன்னதான உண்டியல் திறக்கப்பட்டு எண்ணப்பட்டது.

இதில் ரூ.38 லட்சத்து 99 ஆயிரத்து 960-ம், தங்கம் 136 கிராம், வௌ்ளி 2,498 கிராம் கிடைத்தது. காணிக்கை எண்ணும் பணியில் சாத்தூர், மதுரை, துலுக்கப்பட்டி ஆகிய பகுதிகளை சேர்ந்த ஓம்சக்தி பக்தர் குழு, அய்யப்ப சேவா சங்கம் மற்றும் கோவில் ஊழியர்கள் ஈடுபட்டனர்.

மேலும் இந்து சமய அறநிலைய துறை விருதுநகர் கோவில்களின் உதவி ஆணையர் வளர்மதி, இருக்கன்குடி கோவில் உதவி ஆணையர் கருணாகரன் தலைமையில் பரம்பரை அறங்காவலர் தலைவர் ராமமூர்த்தி மற்றும் அறங்காவலர் குழுவினர், கோவில் அலுவலர்கள், உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *